தலித் விடுதலை இயக்கம் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் தடை
கரூர்: கரூர் அருகே தலித் விடுதலை இயக்கத்தினரின் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
கரூர் அருகே உள்ள வேலாயும்பாளையம், அண்ணா நகரில் பாலமுருகன் கூட்டுறவு நெசவு நூற்பாலை சொசைட்டி செயல்பட்டு வந்தது.
இந்த நசவு நூற்பாலை சொசைட்டி இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் கடன் பெற்றிருந்தது. உரிய காலத்தில் அசல் தொகையும், வட்டியையும் செலுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் வங்கி நிர்வாகம் இந்த சொசைட்டியை நீதிமன்றம் மூலம் ஏலத்திற்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் அந்த இடத்தை தனியார் ஒருவர் ஏலத்தில் எடுத்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த கூட்டுறவு சொசைட்டி உண்மையாகவே ஏலம் விடப்பட்டதா என்பதில் சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் தலித் விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த சொசைட்டிக்கு அருகில் இருந்த துரைசாமி என்பவரது வீட்டையும் நீதிமன்ற உத்தரவை காட்டி இடித்துவிட்டதாகவும், மேலும் பொது மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்து தடுப்பு சுவர் எழுப்பி விட்டதாகவும் தலித் விடுதலை இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், அந்த இடத்தை வழக்கம் போல் பொது மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், தவறு செய்த அதிதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியும் தலித் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தலைமையில், வேலாயுதம்பாளையத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாக அறிவித்தனர்.
ஆனால், இந்த போராட்டம் நீதிமன்றத்தை அவமதிப்பு போன்றது என கூறி போலீசார் அதற்கு தடை விதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications