திருச்சி கோர்ட்டில் எஸ்.ஏ ராஜா சரண் - நாளை பாளை சிறையில் அடைப்பு
திருச்சி: ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வி்திக்கப்பட்ட எஸ்.ஏ ராஜா இன்று திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.
அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பதற்காக நெல்லை போலீஸார் திருச்சி வந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்ஏ ராஜா, வேல்துரை, ஆறுமுகம் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர்நீதி மன்ற கிளை தீர்ப்பு வழங்கியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாலா, அழகரின் தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
எஸ்ஏ ராஜா, ஆறுமுகம், வேல்துரை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கவும், நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே கடநத 8ம் தேதி இலங்கை செல்ல முயன்றபோது திருச்சி விமான நிலையத்தில் வைத்து எஸ்ஐ ராஜாவை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இருப்பினும் நீதிமன்ற வாரண்ட் கிடைக்காத காரணத்தால் அவரை போலீசார் உடனடியாக கைது செய்ய முடியவில்லை. இதையடு்தது அவர்கள் எஸ்ஏ ராஜாவை திருச்சி அடுத்த மணிகண்டபுரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான பல் மருத்துவ கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தங்க வைத்தனர்.
இந் நிலையில் இன்று எஸ்.ஏ ராஜா திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து அவரை பாளையங்கோட்டை சிறையில் நாளை போலீஸார் அடைக்கவுள்ளனர்.