என்ஜினில் கோளாறு - நடு வழியில் நின்ற திருச்செந்தூர் ஸ்பெஷல் ரயில்
விருதுநகர்: திருச்செந்தூரிலிருந்து சென்னை கிளம்பிய வாராந்திர சிறப்பு ரயில், என்ஜின் கோளாறு காரணமாக நடு வழியில் நின்றதால் பயணிகள் சிரமப்பட்டனர்.
திருச்செந்தூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்செந்தூரில் நேற்று மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டது.
விருதுநகருக்கு இந்த ரயில் மாலை 4 மணிக்கு வந்து சேர வேண்டும். ஆனால் ரயில் விருதுநகரில் 3-வது ரயில்வே லெவல் கிராசிங் அருகே வரும்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த இடத்திலேயே ரயில் நின்றது.
உடனடியாக ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் போனது. அவர்கள் துலுக்கப்பட்டியில் இருந்து மாற்று என்ஜினுக்கு ஏற்பாடு செய்தனர். அங்கிருந்து மாற்று என்ஜின் வந்து பின்புறத்தில் இருந்து திருச்செந்தூர் - சென்னை ரயிலை தள்ளி விருதுநகர் ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது.
பின்னர் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.
ரயில்வே லெவல் கிராசிங் அருகே வரும்போது நின்று விட்டதால் ரயிலின் வருகைக்காக அடுத்தடுத்து உள்ள 3 லெவல் கிராசிங்கிலும் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ரெயில், லெவல் கிராசிங்கை கடந்து செல்லாததால், எலக்ட்ரானிக் லாக்கர் முறை பயன்படுத்தப்படுவதால் இந்த 3 ரயில்வே கேட்டுகளையும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ரெயில் விருதுநகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தபின்பு தான் அந்த 3 ரெயில்வே கேட்டுகளும் திறக்கப்பட்டன. இதனால் விருதுநகரில் 3 முக்கிய பாதைகளிலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications