2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற எஸ்ஐ மனைவி கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் கூட்டுறவு காலனி பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் தேனி மாவட்டத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். தற்போது இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவரது மனைவி பிலோமினா (36). இவர்களுக்கு துர்கா (17) என்ற மகளும், சூர்யா (6) என்ற மகனும் உள்ளனர். குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த பிலோமினா, தென்னை மரங்களுக்கு வைக்கும் மாத்திரைகளை குளிர் பானத்தில் கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு அதை அவரும் குடித்தார்.
இதை அறிந்த அக்கம்பக்கத்து வீட்டினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்கள் மூவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி துர்கா இறந்தார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சூர்யா இறந்தார்.
பிலோமினா மட்டும் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீது கொலை மற்றும் தற்கொலை வழக்குகள் பதிவு செய்தனர். தற்போது உடல்நிலை தேறிய நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications