மனைவியை கொன்ற ராணுவ வீரருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: கள்ளக்காதல் காரணமாக மனைவியை கொலை செய்த ராணுவ வீரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. ராணுவ வீரர். இவரது மனைவி தேவி (20). ராணுவ வீரரான கோவிந்தசாமி கடந்த ஜுன் மாதம் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாகவும், அதை அவரது மனைவி தேவி நேரில் பார்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தேவி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி தேவியை மண்எண்ணை ஊற்றி எரித்து கொன்றதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் கோவிந்தசாமி சென்னை உயர் நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications