அரசு மருத்துவமனையில் மட்டுமே 'டாமிப்ளூ' மாத்திரை
இது குறித்து அவர் கூறுகையில்,
வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 12 பேர் சென்னையிலும், 4 பேர் கோயம்புத்தூரிலும், இருவர் திருச்சியிலும், தலா ஒருவர் நெல்லை மற்றும் கன்னியாகுமரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டாமிப்ளூ மாத்திரை மூலம் இந்த நோயை ஐந்து நாட்களில் குணமாக்கிவிடலாம். இது அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் கிடைக்கும். வேறு எங்கும் கிடைக்காது.
இந்த மாத்திரையை நோய் தாக்கப்பட்டவர்களை தவிர்த்து மற்றவர்கள் சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு செல்களை அழித்து விடும். இதன்மூலம் அவர்களுக்கு வேறு பக்கவிளைவுகள் ஏற்படலாம். இது போன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக தான் இந்த மருத்து கடைகளில் விற்கப்படவில்லை.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு கூட அரசு மருத்துவமனையில் இருந்துதான் மாத்திரை கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 30 ஆயிரம் மாத்திரை கையிருப்பு உள்ளது. எல்லா மாவட்ட அரசு மருத்துவமனையில் போதுமான அளவு இருப்பு உள்ளது.
எனவே பன்றிக் காய்ச்சல் இருப்பது யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் தயங்காமல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.