நெல்லையில் 3 பேருக்கு பன்றி காய்ச்சல்
நெல்லை: நெல்லையில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தற்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுள்ளது.
நாட்டிலே மகாராஷ்டிராவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புனே நகரின் தட்பவெட்ப நிலை இந்த காய்ச்சல் வேகமாக பரவ ஏற்றதாக இருப்பதால் அங்கு பலர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நெல்லையில் மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்த பேச்சிமுத்து என்ற வாலிபருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லையில் மேலும் இரண்டு சிறுவர்கள் தொடர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் பாளையங்கோட்டை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அந்த பகுதிக்கு செல்பவர்கள் அனைவரும் முகமுடி அணிந்து செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்தும் நெல்லைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த நோய் தமிழகத்தின் தென் பகுதியிலும் பரவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் பன்றிகள் வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications