அந்தமானில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம்
போர்ட்பிளேர்: அந்தமானில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் ஆகும்.
நேற்று நள்ளிரவு 1.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.3 புள்ளிகளாகப் பதிவானதாக டெல்லியில் உள்ள மத்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவி்ல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்துபோய் தெருக்களில் ஓடினர். இதனால் காலை வரை அங்கு பெரும் பீதியும் பரபரப்பும நிலவியது.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
பயங்கர நிலநடுக்கத்துக்குப் பின் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுவது சஜகம் என்றும் அதுபோன்ற நிலநடுக்கம் தான் இது என்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு 1.26 மணியளவில் அந்தமானுக்கு வடக்கே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவானது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
இதையடுத்து கடந்த வியாழக்கிழமையும் 5.5 புள்ளிகள் அளவுக்கு இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு நிலநடுக்கங்களும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications