இந்தியாவுக்கு 4.78 பில்லியன் டாலர் ஐஎம்எப் உதவி!

Subscribe to Oneindia Tamil

IMF
வாஷிங்டன்: பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஐஎம்எப்பிடமிருந்து சிறப்பு எடுப்பு உரிமை மூலம் 4.78 பில்லியன் டாலர் நிதியைப் பெறுகிறது இந்தியா.

உலகம் முழுக்க நிலவும் பொருளாதார மந்தத்தைப் போக்க, 250 பில்லியன் டாலர் அளவுக்கு நிதியை வழங்குகிறது ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதி அமைப்பு.

ஐஎம்எப்பில் அதன் உறுப்பு நாடுகள் வைத்துள்ள அந்நியச் செலாவணி இருப்பிலிருந்து 74 சதவிகிதம் அளவுக்கு இந்த முறை நிதி உதவி அளிக்கப்படுகிறது. இது தவிர சிறப்பு எஸ்டிஆர் உதவி மூலம் 33 பில்லியன் டாலர் அளவுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இதற்காக ஐஎம்எப்பின் சில விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

இந்த இருவித நிதி உதவி மூலம், உலக நாடுகள் மொத்தம் 316 பில்லியன் டாலர்கள் நிதி உதவியைப் பெறுகின்றன. உலகம் முழுக்க பொருளாதார மந்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், உலக நாடுகளின் கூட்டு முயற்சியே இந்த நிலை மாற உதவும் என்பதையும் புரிந்து கொள்ள ஐஎம்எப்பின் இந்த நடவடிக்கை உதவும் என பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+