சென்னை அருகே பயங்கர விபத்து-4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே லாரியும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
சென்னை நொச்சிக்குப்பத்தை சேர்ந்த 15 பேர் ஒரு வேனில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு நேற்று நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது செங்குன்றம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனில் பயணம் செய்த கலையரசன் (30), சுதாகர் (30), 5 மாத குழந்தையான நவதேஷ் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
11 பேர் படுகாயமடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications