ஜனநாயகம் மீதான நம்பிக்கை போய்விடும்-ராஜா

Subscribe to Oneindia Tamil

கோவை: தேர்தலில் பண ஆதிக்கம் தொடர்ந்தால் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதிருக்கும் நம்பிக்கை போய்விடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோயம்புத்தூரில் அவர் கூறுகையில்,

இடைத்தேர்தலில் நாங்கள் இரண்டு தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கட்சியினர் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் பண ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அரசு இயந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்ந்தால் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதிருக்கும் நம்பிக்கை தகர்ந்துவிடும். இதனால் தேர்தல் ஆணையம் பண ஆதிக்கத்தை தடுக்க வேண்டும். அரசு இயந்திரங்கள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் அனைவரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு தவறாமல் வாக்குபதிவில் கலந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசு புதிததாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை சேர்க்க வேண்டும். பின்னர் அதை அனைத்து கட்சிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

மாநில அரசு மீது பழிபோட கூடாது...

தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் மீது பழிபோடாமல் மத்திய அரசு அதை குறைப்பதற்கான முயற்சியில் இறங்கவேண்டும் என்றார் ராஜா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+