For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்செக்ஸ்... உஷாரான ஆரம்பம்!

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: பங்குச் சந்தையில் நேற்று கண்ட சூட்டை மறக்காத முதலீட்டாளர்கள் இன்று ரொம்ப உஷாராக 'ஆட்டத்தை' ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய வர்த்தகத்தில் 627 புள்ளிகள் சரிந்து பெரும் தடுமாற்றத்துக்கு உள்ளானது சென்செக்ஸ். நிப்டியிலும் கிட்டத்தட்ட 200 புள்ளிகள் வீழ்ந்தன. நேற்றைய வர்த்தகத்தில் பெருமளவு பங்கு விற்பனையில் நாட்டம் கொண்டிருந்த முதலீட்டாளர்கள் இன்று சந்தையின் போக்கை மட்டும் எச்சரிக்கையுடன் கவனித்து வருவதால், காலை வர்த்தகம் துவங்கியதிலிருந்து சீரான நிலை காணப்பட்டது.

துவக்க மணி அடித்த சில நிமிடங்களுக்குப் பிறகு சந்தையில் 30 புள்ளிகள் உயர்ந்தன. பின்னர் 160 புள்ளிகள் வரை உயர்வு கண்டது சென்செக்ஸ்.

மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் டிஎல்எப் பங்குகள் நல்ல உயர்வு கண்டன. ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், ஹீரோ ஹோண்டா, ஹிண்டால் ஸ்டீல்,. ஸ்டெரிலைட், எஸ்பிஐ, ஓஎன்ஜிஸி, மாருதி, டாடா ஸ்டீல் பங்குகள் லாபத்தில் கைமாறின.

எச்டிஎப்சி, கிராஸிம், டாடா பவர் பங்குகள் இறங்குமுகத்தில் இருந்தன.

பிற்பகல் 12 மணி அளவில் சென்செக்ஸில் 200 புள்ளிகள் உயர்ந்திருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X