காமன்வெல்த்-டெல்லி வருகிறார் உசேன் போல்ட்
டெல்லி: டெல்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். அடுத்த முறை 9.4 வினாடிகளில் இலக்கை கடக்க பயிற்சி எடுத்து வருகிறேன் என ஜமைக்க தடகள வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
உலகின் அதிவேக வீரர் ஜமைக்காவின் உசைன் போல்ட். ரசிகர்களால் மின்னல் வீரர் என்றழைக்கப்படும் அவர் நேற்று முன்தினம் பெர்லின் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் 100 மீ் தடகள போட்டியில் 9.58 வினாடிகளில் வந்து தனது பழைய உலக சாதனையை முறியடித்தார்.
இந்நிலையில் தனது அடுத்து இலக்கு குறித்து 22 வயதான போல்ட் கூறுகையில்,
நான் அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். இதை எனது பயிற்சியாளர் இறுதி செய்வார்.
அடுத்து புதிய இலக்கு நிர்ணயித்துள்ளேன். அது 9.4 வினாடிகளில் 100 மீ., தூரத்தை கடக்க வேண்டும் என்பது தான். நான் இந்த முயற்சி 9.4 வினாடிகளில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications