தாக்கும் தமிழக அதிகாரிகள்-கேரள லாரி டிரைவர்கள்
செங்கோட்டை: கேரள லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மீது தமிழக அரசு அதிகாரிகள் தாக்குதல் நடத்துவதாகக் கூறி வரும் 20ம் தேதி பஸ்களை தவிர மற்ற போக்குவரத்து வாகன ஊழியர்கள் தேசிய நெடுச்சாலை 208ல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து கேரள மாநில கொல்லம் மாவட்டம் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள் சங்க நிர்வாகிகளான வர்கீஸ், மனோஜ் கோபி, மாத்தி குட்டி, மனோஜ் குமார் ஆகியோர் கூறுகையில்,
கேரள மாநில லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்களை தமிழக போலீசாரும், சோதனை சாவடி அதிகாரிகளும் ஓட, ஓட விரட்டி தாக்குதல் நடத்துகின்றனர். இதுபோன்ற தாக்குதல்கள் மணல், பாறை பவுடர், சிறிய மற்றும் பெரிய ஜல்லி கற்களை ஏற்றி வரும் லாரி தொழிலாளர்கள் மீது நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
லாரியில் அதிக பாரம் ஏற்றி வந்தாலும் இல்லாவிட்டாலும் கேரள மாநிலத்திற்கு வந்து செல்லும் லாரிகள் மட்டுமே தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அதே போன்று மணல் ஏற்றி வரும் தமிழக லாரிகளுக்கு குறைந்த கட்டணமும், கேரள மாநில லாரிகளுக்கு கூடுதல் கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது.
புகார் ஏற்க மறுப்பு...
இதுகுறித்து தமிழக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் புகார் செய்தபோது அவர் சரியான பதில் கூறாததோடு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராதவர்களின் புகார் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க இயலாது என தெரிவித்து விட்டார். இது அவரது சொந்த கருத்தா, இல்லை தமிழக அரசின் கருத்தா...
இருமாநில அதிகாரிகளும் இப்பிரச்சனைக்கு உடனே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் வரும் நாட்களில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். இது இரு மாநிலங்களுக்கு இடையே வீண் பிரச்சனையை உருவாக்கும்.
வரும் 20ம் தேதி திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கேரள எல்லையில் கேரள மாநில பகுதியான ஆரியங்காவில் பஸ்களை தவிர மற்ற அனைத்து வாகனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
அச்சுதானந்தனிடம் மனு...
மேலும் கேரள லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை தமிழக அரசு உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில முதல்வர் அச்சுதானந்தனனுக்கும், மத்திய அரசுக்கும், லாரி, டெம்போ, டிம்பர் தொழி்லாளர்கள் சங்க சிஐடியூ தலைவர் ஜெயசந்திரன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார் என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications