வரிச் சலுகையால் ஈராக் போகாமல் இந்தியா வந்த வட கொரிய கப்பல்!

Subscribe to Oneindia Tamil

MV Mu San Ship
சென்னை: மர்மமான முறையில் அந்தமான் அருகே வந்த வட கொரியக் கப்பல், இந்தியாவுக்குள் பிரவேசித்ததற்குக் காரணம், வழி தெரியாமல் வந்தது அல்ல. மாறாக, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் அறிவித்த சுங்க வரி ரத்து என்ற அறிவிப்பால்தான் அந்த வட கொரியக் கப்பல் ஈராக் போகாமல், இந்தியாவுக்குள் வந்து விட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.

ஜூலை 31ம் தேதி அமைச்சர் பவார், தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து சர்க்கரையை, சுங்க வரி விதிப்பு ஏதும் இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார். இதுதான் ஈராக் நோக்கிப் போய்க் கொண்டிருந்த வட கொரிய கப்பல், இந்தியா நோக்கி திரும்பக் காரணம்.

எப்படி..? வட கொரியாவைச் சேர்ந்த எம்.வி. மு சான் என்ற அந்த கப்பல், 16 ஆயிரத்து 500 டன் சர்க்கரையுடன் ஈராக் நோக்கி போய்க் கொண்டிருந்தது. தாய்யலாந்திலிருந்து கிளம்பி ஈராக்கில் உள்ள உம் குவாசர் என்ற இடத்திற்குப் போவதாக திட்டம்.

இந்த நிலையில்தான் பவாரின் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பைக் கேட்ட அந்தக் கப்பலை ஈராக்குக்கு அனுப்பிய நிறுவனத்தின் சென்னைப் பிரிவு தடாலடியாக நடவடிக்கையில் இறங்கி கப்பலை ஈராக் போக வேண்டாம், இந்தியாவுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் சர்க்கரையை விற்கவே இந்தத் திட்டம்.

அதேசமயம், மத்திய அரசின் அறிவிப்பு முழுமையாக அமலுக்கு வந்த பின்னரே கப்பல் உள்ளே வர வேண்டும் என்பதற்காக ஆங்காங்கு நின்று நின்று (இந்திய கடற்படைக்கும், கடலோரக் காவல் படைக்கும் தெரியாமல்) போகுமாறு கப்பல் கேப்டனுக்கு உத்தரவு போனது.

இதனால்தான் இந்தக் கப்பல் இந்திய கடல் பகுதிக்குள் ஆங்காங்கு பதுங்கி வந்துள்ளது. ஜூலை 31ம் தேதி அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டாலும் கூட அரசு கெஜட்டில் வர ஆகஸ்ட் 5ம் தேதி வரை ஆகும் என்பதால்தான் கப்பலை மெதுவாக செலுத்துமாறு கேப்டனுக்கு உத்தரவு போயுள்ளது.

கப்பலை தாமதமாக செலுத்துவதால், ஒரு நாளைக்கு 7000 டாலர் வரை தருவதாகவும் கப்பலை வாடகைக்கு அமர்த்திய நிறுவநம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பலை அந்தமான் நிக்கோபார் அருகே கடல் பகுதியில் எங்காவது நிறுத்துமாறும் அது கூறியுள்ளது.

அப்படி அந்தமான் பகுதியில் கப்பல் நின்று கொண்டிருந்தபோதுதான் இந்திய கடற்படை இந்தக் கப்பலைப் பார்த்து சுற்றி வளைத்தது. ஆகஸ்ட் 3ம் தேதி கப்பல் அந்தமானுக்கு வந்துள்ளது. 5ம் தேதி வரை கப்பல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. ஆனால் நமது கடற்படைக்கோ அல்லது கடலோரக் காவல் படைக்கோ அதுகுறித்து சுத்தமாக தெரியவில்லை.

அந்த வழியாக சென்ற பயணிகள் படகில் சென்றவர்கள் தான் தனியாக ஒரு கப்பல் நிற்பதைப் பார்த்து கடற்படை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். (நமது கடலோரப் பாதுகாப்பு அந்த அளவுக்கு உள்ளது.)

இதையடுத்து அங்கு விரைந்த கடலோரப் படையினர் விசாரணை நடத்தியபோது முதலில் கப்பலில் பழுது என அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதில் உள்ள அனைவரையும் பின்னர் கைது செய்து விசாரித்தபோது உண்மை தெரிய வந்தது.

விரைவில் இந்தக் கப்பலில் உள்ள சர்க்கரை காக்கிநாடாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. அப்போது சென்னை துறைமுகத்திலிருந்து இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல் சரங்கும், மு சான் கப்பலுடன் காக்கி நாடா வரை செல்லும். அங்கு சர்க்கரை இறக்கி விடப்படுவதை கடற்படையினர் நேரடியாக கண்காணிப்பர்.

மேலும் கப்பலையும், அதில் உள்ள பொருட்களையும் முழுமையாக சோதனையிட உளவுத்துறையினரும் ஆயத்தமாகி வருகின்றனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+