காவிரி-தமிழகத்துக்கு கூடுதல் நீரை திறக்கவில்லை: கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றும், அணைகள் நிரம்பிவிட்டதால் உபரியாக உள்ள நீர் தான் திறந்துவிடப்படுவதாகவும் கர்நாடகம் கூறியுள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடகம் 20 டிஎம்சி தண்ணீர் தர வேண்டியுள்ளது. அம் மாநில அணைகள் நிரம்பியுள்ள நிலையிலும் நீரை கர்நாடகம் திறந்துவிடாமல் உள்ளது.

இந் நிலையில் கடந்த 17ம் தேதி சென்னையில் நடந்த காவிரி மின் திட்டங்கள் குறித்த கூட்டத்தில் பேசிய தமிழக அதிகாரிகள், முதலில் கர்நாடகம் உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்றனர்.

இதையடுத்து கர்நாடகம் நீரைத் திறந்துவிட்டுவிட்டதாகவும், அதுவும் கூடுதல் நீரைத் திறந்துவிட்டுவிட்டதாகவும் கன்னட பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதை கர்நாடகம் மறுத்துள்ளது.

இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சாரியா கூறுகையில், கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவை அடைந்துவிட்டது. இதனால் உபரி நீர் தான் தமிழகத்துக்குத் திறந்து விடப்படுகிறது.

தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படுவதாக வரும் செய்திகள் தவறானவை.

காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளதோ, அந்த அளவு நீர் திறந்துவிடப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+