ஹரியானா சட்டசபை கலைப்பு-அக்டோபரில் தேர்தல்
சண்டிகர்: ஆயுள் காலம் முடிய இன்னும் 6 மாதம் இருக்கும் நிலையில், ஹரியானா மாநில சட்டசபையைக் கலைக்குமாறு காங்கிரஸ் அரசு மாநில ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது.
முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஆளுநர் ஜெகன்னாத் பஹாடியாவுக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிய இன்னும் ஆறு மாத காலம் உள்ளது. அதாவது 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் சட்டசபை காலம் முடிவடைகிறது. ஆனால் இப்போதே சட்டசபை கலைக்கப்பட்டு விட்டது.
வருகிற அக்டோபர் மாதம் மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது ஹரியானாவுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையில்தான் முன் கூட்டியே சட்டசபையைக் கலைக்கும் முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications