ரூ.1.25 கோடி மோசடி-அமிர்தாசஞ்சன் கேஷியர் கைது
சென்னை: அமிர்தாஞ்சன் நிறுவனத்தின் ரூ. 1.25 கோடி பணத்தை சுருட்டியதாக அந்த நிறுவனத்தின் கேஷியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின், பொது மேலாளர் விஸ்வநாதன் காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், எங்களது நிறுவனத்தில் கேஷியராகப் பணியாற்றும் சுப்பிரமணியன் என்பவர் ரூ.1.25 கோடி மோசடி செய்து
விட்டதார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
சுப்பிரமணியன் இதே நிறுவனத்தில் கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கம்பெனியில் இருந்து மருந்து சப்ளை செய்யப்பட்ட நிறுவனங்களில் இருந்து வரப்பட்ட காசோலைகளை திருப்பி அனுப்பி அதற்கு பதிலாக அந் நிறுவனங்களில் இருந்து ரொக்கமாக பெற்று, அந்த ரொக்கத்தை கம்பெனியின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.
இதன் மூலம் ரூ.1.25 கோடி மோசடி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது மனைவி பெயரில் நிறுவனம் ஒன்றை நிறுவி அதன் மூலம் மருந்து சப்ளை செய்து மோசடி செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கத்தையும், பல்வேறு இடங்களில் வாங்கி குவித்துள்ள சொத்துக்களுக்கான ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications