ஜெ. குறித்து அவதூறு-சம்பத்துக்கு பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக அவரது ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத மதிமுக கொள்கை விளக்கப் பிரிவு செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு சென்னை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக கூறி கடந்த 2003ம் ஆண்டு நாஞ்சில் சம்பத் மீது சென்னை 4வது கூடுதல் கோர்ட்டில், அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்கு நாஞ்சில் சம்பத் வராமலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபோது சம்பத் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி காவல்துறைக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications