ஸ்ரீவைகுண்டத்தில் காங் வெற்றி: பாஜக-சிபிஐ டெபாசிட் இழப்பு
சென்னை: ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி 31 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சுடலையாண்டிக்கு 55,827 வாக்குகள் கிடைத்தன. இத்தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அவரை எதிர்த்துப் போட்டியி்ட்ட வேட்பாளர்கள் தேமுதிகவைச் சேர்ந்த செளந்தரபாண்டியன் 22 ஆயிரத்து 468 வாக்குகளுடன் 2வது இடத்தைப் பிடித்தார்.
வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் விவரம்:
மொத்தம் பதிவான வாக்குகள்: 84,501 வாக்குகள்
சுடலையாண்டி (காங்.) - 53,827
செளந்தரபாண்டியன் - 22,468
தனலட்சுமி (சிபிஐ) -3407
சந்தனக்குமார் (பாஜக) - 1797
வெற்றி வித்தியாசம் - 31,379 வாக்குகள்.
டெபாசிட் இழந்த சிபிஐ, பாஜக:
இந்தத் தொகுதியில் சிபிஐ மற்றும் பாஜக வேட்பாளர்கள் இத்தேர்தலி்ல் டெபாசிட் தொகையை இழந்தனர். இரு கட்சிகளும் தேசிய கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.