டிவி ஊழல்-ஜெ விடுதலைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஆட்சியில் பஞ்சாயத்துகளுக்கு கலர் டி.விக்கள் வழங்குவதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து க்கல் செய்யப்பட்ட அப்பீல் மனு மீது உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் பஞ்சாயத்துகளுக்கு இலவச கலர் டி.வி. வழங்குவதில் பெரும் ஊழல் நடந்தது. டிவிக்களை வாங்கியதில் பல கோடி சுருட்டப்பட்டது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, உடன் பிறவா சகோதரி சசிகலா, அவரது அக்காள் மகன் பாஸ்கிரன் ஆகியோரை சென்னை தனி நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த செல்வகணபதிக்கு சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் அப்பீல் செய்தது.

அதே போல இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி செல்வகணபதி உள்ளிட்டோரும் அப்பீல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பை நீதிபதி ஜெயபால் இன்றைக்கு அறிவிக்கவுள்ளார்.

அதே போல இலவச வேட்டி-சேலைகள் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதும் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+