5 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படு கேவலமாய் தோற்ற கம்யூ-பாஜக!

இரு இடதுசாரிக் கட்சிகளும் நான்கு தொகுதிகளிலும் சேர்த்தே 16,476 வாக்குகளைத் தான் பெற்றுள்ளன. பாஜக 4 தொகுதிகளிலும் சேர்த்து 13,275 வாக்குகளைத் தான் பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் இளையாங்குடி நீங்கலாக மற்ற நான்கு தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன. பாஜக ஐந்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் கம்பம் தொகுதி பாஜக வேட்பாளர் கடைசி நேரத்தில் திமுகவுக்குப் போய் விட்டார்.
தொண்டாமுத்தூரில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பெருமாள் பெற்ற ஓட்டுக்கள் - 9,126.
கம்பம் தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ராஜப்பன் பெற்ற ஓட்டுக்கள் - 2,303.
பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் எஸ். கண்ணு பெற்ற ஓட்டுக்கள் - 1,640.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் தனலட்சுமி பெற்ற ஓட்டுக்கள் - 3,407.
இந்த இரு கட்சிகளும் சேர்ந்து நான்கு தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையே 16,476 தான்
இது தான் பாஜக நிலை..
பாஜகவைப் பொறுத்தவரை இளையாங்குடியில் 1,487, தொண்டாமுத்தூரில் 9,045, பர்கூரில் 1,482, கம்பத்தில் 946, ஸ்ரீவைகுண்டத்தில் 1,797 வாக்குகளையே பெற்றுள்ளது. இந்தக் கட்சி 4 தொகுதிகளிலும் சேர்த்து 13,275 வாக்குகளைத் தான் பெற்றுள்ளது.
இதன்மூலம் இந்த மூன்று தேசியக் கட்சிகளுக்கும் சொந்தமாக டெபாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு தமிழகத்தில் 'செல்வாக்கு' இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இதனால் இடதுசாரி கட்சிகளும் பாஜகவும் தனித்துப் போட்டியிட்டால் தேறவே முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் 'புட்போர்ட்' பயணத்தைத்தான் மேற்கொண்டாக வேண்டிய நிலைக்கு அந்தக் கட்சிகள் மீண்டும் தள்ளப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications