For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆந்திராவில் லேசான நிலநடுக்கம்-2.7 ரிக்டர்
ஹைதராபாத்: ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆந்திரா மாநிலத்தின் கம்மம் மாவ்டடத்தில் உள்ளது கொத்தகடம். இங்கு நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் மிரண்டு போன மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருவுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 2.7 ஆக பதிவாகி உள்ளது.
இது மிகவும் லேசான நிலநடுக்கம் என்றாலும் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இதேபோல இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 5.8 ஆக இருந்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
Comments
Story first published: Sunday, August 23, 2009, 17:28 [IST]