வறட்சி: குடியரசு தினத்தில் தற்கொலை-ஜார்க்கண்ட் விவசாயிகள் மிரட்டல்
ராஞ்சி: வறட்சி அதிகரித்துள்ளதால் அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அனைவரும் மொத்தமாக தற்கொலை செய்து கொள்வோம் என ஜார்க்கண்ட மாநில விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில விவசாயிகள் விளைச்சலுக்கு பருவ மழையை பெரிதும் நம்பியிருக்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு மழை போதுமான அளவு பெய்யவில்லை. இதையடுத்து சுமார் 12 சதவீத விவசாயிகள் மட்டுமே விளைச்சலுக்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ராஞ்சியில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் செய்தனர்.
அப்பது கிஷான் சங் என்ற விவசாய சங்கத்தின் தலைவர் சர்தாஜ் அகமது கூறுகையில்,
அரசு வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான அரிசியை வழங்க வேண்டும். அதிகாரிகள் ஜார்க்கண்ட்டின் நிலத்தடி நீரை அதிகரிக்க தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். மேலும், ஆடு, மாடுகளுக்கு தேவையான தீவணங்களை வழங்க வேண்டும்.
எங்கள் கோரிக்கைகள் வரும் குடியரசு தினத்துக்கு முன்னதாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை என்றால் நாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொள்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications