சென்னை டூ துபாய் விமானத்தில் கோளாறு - ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து இன்று காலை துபாய் செல்லவிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
300 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானம் இன்று காலை 4.15 மணிக்கு துபாய் கிளம்பவிருந்தது. பயணிகள் அனைவரும் செக் இன் முடிந்து லவுஞ்சில் காத்திருந்தனர்.
நான்கு மணி நேரமாக காத்திருந்தும் விமானம் கிளம்பும் வழியைக் காணோம். இதனால் பயணிகள் போராட்டத்தில் குதித்தனர். காலை 8 மணியளவில் விமான நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் கோஷமிட்டனர். அப்போது அவர்களிடம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து வேறு விமானத்தில் பயணிகளை அனுப்பி வைக்க விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications