செங்கோட்டை-பைக் மீது லாரி மோதி இருவர் பலி
செங்கோட்டை: செங்கோட்டை அருகே பைக் மீது மீன் லாரி வேகமாக மோதியதில் இருவர் பலியானார்கள். இதையடுத்து போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.
செங்கோட்டை பிள்ளயார் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மகன் செய்யது திவான் அலி. இவரும் செங்கோட்டை பம்பு ஹவுஸ் ரோட்டை மசூதுவும் அங்குள்ள தியேட்டரில் வேலை பார்க்கின்றனர்.
இன்று காலை இருவரும் சினிமா போஸ்டர்களை ஓட்டிவிட்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கல் செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே வந்தபோது தூத்துக்குடியிலிருந்து கொல்லத்திற்கு மீன்களை ஏற்றி வந்த மினிலாரி பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பைக்கில் சென்ற செய்யது தீவான் அலி, மசூது இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து செங்கோட்டை இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை நடத்தி லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடியை சேர்ந்த பொடிசிங்கம் மகன் சம்பத் என்பவர கைது செய்தனர். இறந்த செய்யது திவான் அலிக்கு திருமணமாகி ரம்ஜான் என்ற மனைவியும், ரபியா என்ற மகளும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications