உத்தரவை மீறி ஓட்டுப் போட்ட 2 பேரின் விரல்களை வெட்டிய தலிபான்கள்
காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் ஓட்டு போடக் கூடாது என்ற தங்களது கட்டளையை மீறிய 2 வாக்காளர்களின் விரல்களை வெட்டியுள்ளனர் தலிபான் தீவிரவாதிகள்.
இருவரும் காந்தஹாரைச் சேர்ந்தவர்கள் ஆவர். வியாழக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். இருப்பினும் கிட்டத்தட்ட 70 சதவீத வாக்கார்கள் தேர்தலில் பங்கேற்று வாக்களித்திருந்தனர்.
இந்த நிலையில் காந்தஹாரைச் சேர்ந்த 2 வாக்காளர்களைப் பிடித்த தலிபான் தீவிரவாதிகள், அவர்கள் கையில், தேர்தல் மையத்தில் மை வைக்கப்பட்டிருந்த விரல்களை வெட்டித் துண்டாக்கி அட்டகாசம் செய்துள்ளனர்.
இதனால் வாக்காளர்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது. தலிபான்களிடம் சிக்கினால் விரல்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் மூழ்கியுள்ளனர். இதனால் பலர் விரல்களில் இடப்பட்ட மையை அழிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications