தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி வீழ்ச்சி

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1315 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டது. அதாவது சராசரியாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 42 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்தது.
ஆனால், உற்பத்தி தற்போது 630 மில்லியன் யூனிட் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இந்த மாதம் ஒரே ஒரு நாள் (46 மில்லியன் யூனிட்) மட்டும் தான் சராசரி அளவான 42 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மின்சார உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது.
11ம் தேதி 41 மில்லியன் யூனிட் தயாரிக்கப்பட்டது. 16ம் தேதி அது 13 மில்லியன் யூனி்ட் ஆகவும், அதன் பின்னர் தினமும் 3 மில்லியன் யூனிட்டுக்கும் குறைவாக தான் கிடைத்து வருகிறது. இதையடுத்து இந்த ஆண்டு காற்றாலை சீசன் கிட்டதட்ட முடிந்துவிட்டதாக கருதப்படுகிறது.
அதேபோல் கடல் அலைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சார அளவும் தற்போது குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அலைகள் மூலம் 2,190 மில்லியன் யூனி்ட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்த ஆண்டு கடந்த 19ம் தேதி வரை 1,637 மில்லியன் யூனி்ட்கள் கிடைத்துள்ளது.
ஆனால், கடந்த மூன்று மாதத்தில் இந்த உற்பத்தி சுமார் 550 யூனிட்களாக உள்ளது. இதையடுத்து வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக மின்சார வாரியத்தின் கையிருப்பு கடந்த ஆண்டை விட அதிகமிருப்பது ஆறுதலான செய்தி. கடந்த ஆண்டு 826 மில்லியன் யூனிட்டாக இருந்த கையிருப்பு தற்போது 1,125 யூனிட் உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications