கால்பந்து :வெடிகுண்டு வீசி ரசிகர்கள் வெறியாட்டம்-ஒருவர் பலி
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த கால்பந்து போட்டியில் தோல்வியடைந்த அணியின் ரசிகர்கள், எதிரணி ரசிகர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார்.
கொல்கத்தாவின் வட கிழக்கு பகுதியில் நேற்று கால்பந்து தொடர் ஒன்றின் அரையிறுதி போட்டி நடந்தது. போட்டியின் முடிவில் தோல்வியடைந்த அணியின் ரசிகர்களால் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.
இதையடு்த்து ஆத்திரமடைந்த அவர்கள் வெடிகுண்டுகள் சகிதம் வந்து தாக்குதல் நடத்தினர். மேலும் கால்பந்து மைதானத்துக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார்.
அப்போதும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் அருகிலிருக்கும் வேதிக் வில்லேஜ் என்ற ரிசார்ட்டுக்கு தீ வைத்து சென்றது.
இது குறித்து கொல்கத்தா டிஐஜி எஸ்என் குப்தா கூறுகையி்ல், இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். மேலும், 15 பேர் படுகாயமடைந்தார்கள். தீயை அணைக்க சுமார் 10 தீயணைப்பு வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.