ஆந்திரா லாட்ஜில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் கொலை?
ஹைதராபாத்: ஆந்திராவின் செக்ந்திராபாத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு மர்மமாக மரணமடைந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
துபாயில் இருக்கம் பெட்ரோலியம் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் காசிநாகலட்சுமி பராசாத் (45). சமீபத்தில் இந்தியா வந்த அவர் தனது மனைவி விஜயலட்சுமி (40), மகள்கள் கேத்தனா (15), கவிதா (10) ஆகியோருடன் கடந்த 19ம் தேதி செகந்திராபாத் வந்தார்.
அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அவர்கள் தங்கியிருந்தனர். அவர்களோடு மேலும் 2 ஆண்களும், 2 பெண்களும் தங்கியதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மூன்று போரும் லாட்ஜ் அறையில் மர்மமாக இறந்து கிடந்தனர். ஆனால், அவர்களுடன் தங்கியிருந்த மற்ற நான்கு பேரையும் காணவில்லை.
இதையடுத்து லாட்ஜ் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்ற சந்தேகம் தற்போது அதிகரித்துள்ளது.
மேலும், பிரசாத்தின் கழுத்தில் கயிற்றால் இறுக்கிய தடம் இருப்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில் அவர்களுடன் தங்கியிருந்த அந்த நான்கு பேரும் யார், எதற்காக அவர்கள் பிரசாத் குடும்பத்தினருடன் வந்தார்கள் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications