கச்சா எண்ணை விலை உயர்வு - பெட்ரோல், டீசல் விலை உயரும்?
Subscribe to Oneindia Tamil

கடந்த ஜூலை மாதம் கடைசியாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணை விலை உயர்ந்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மும்பைக்கு வந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா செய்தியாளர்களிடம் பேசுகையில், கச்சா எண்ணை விலை ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் உள்ளது.அது நிலையான இடத்திற்கு வரட்டும்.
அதை ஒரு மாதம் அல்லது 6 வாரங்கள் கண்காணிப்போம். அதன் பின்னரே அதுகுறித்து யோசிக்கப்படும். கச்சா எண்ணை 75 அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்தால் உயர்வு குறித்து யோசிக்கப்படும் என்றார் தியோரா.












Click it and Unblock the Notifications