கேரள எல்லையில் 127 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்
செங்கோட்டை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த 127 மூடை ரேசன் அரிசி பிடிபட்டது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் தமிழக அரசு அரசு ரேசன் கடைகளில் ரூ.1க்கு 1 கிலோ அரிசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், சில கடத்தல்காரர்கள் ரேசன் கடைகளில் விநியோகிக்கப்படும் இந்த அரிசியை தமிழகத்திலிருந்து இருந்து கேரளாவுக்கு ஆட்டோ, பஸ், ரயில் மூலம் கடத்தி சென்று ரூ.5க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதை தடுக்க தமிழக அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. கேரள எல்லைப்பகுதிகளில வருவாய்துறை, மற்றும் காவல்துறையினர் மூலம் தீவிர சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று தமிழகத்தின் எல்லைகளிலுள்ள சோதனை சாவடிகளை கடந்து ஒரு மினி லாரி ஒன்று இடுக்கி மாவட்டம் காலடி என்ற பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
தென்மலை, கழுதூருட்டி அருகே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த மினி லாரியை மறித்து சோதனை நடத்தினர். அப்போது அதில் தமிழக ரேசன் அரிசி 127 மூடைகள் கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு மூடையும் சுமார் 50 கிலோ எடை கொண்டதாகும். அதில் ஜெயா பிரான்ட் அரிசி என முத்திரை குத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் அரிசி மூடைகளையும், லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கடந்தா மாதம் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 மூடை அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது 127 மூடை பிடிப்பட்டுள்ளது. லாரி டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்டுள்ள அரிசியின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்றார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications