ஸ்வைன் ப்ளூ-ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்தியர் பலி
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகை மிரட்டி வருகிறது. தற்போது மேற்கு ஆசிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்டில் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்ப்டடு 63 வயதான இந்தியர் ஒருவர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அந்நாட்டு சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், கூறுகையில்,
சமீபத்தில் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு மூச்சு திணறலும், நெஞ்சில் லேசான வீக்கமும் இருந்தது.
அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது தான் இங்கு ஏற்பட்டுள்ள முதல் பன்றி காய்ச்சல் மரணம் என்றார்.












Click it and Unblock the Notifications