'வீரப்பன் புகழ்' பிதாரியின் மகனை மணக்கும் மதுரை உதவி கலெக்டர்
சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை மூலம் பிரபலமான கர்நாடக காவல்துறை அதிகாரி சங்கர் பிதாரியின் மகனுக்கும், மதுரை உதவி கலெக்டர் ரோகினிக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் உச்சத்தில் இருந்தபோது அவனைப் பிடிக்க அமைக்கப்பட்ட கர்நாடக அதிரடிப்படைத் தலைவராக இருந்தவர் சங்கர் பிதாரி. தேடுதல் வேட்டையின்மூலம் அவர் பிரபலமானார். தற்போது பெங்களூர் போலீஸ் கமிஷனராக உள்ளார்.
இவரது குடும்பத்தில் பிதாரியின் மனைவி உமா தேவி ஒரு டாக்டர். மற்றவர்கள் ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிதாரியின் மூத்த சகோதரி விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். மகாராஷ்டிர மகளிர் ஆணைய உறுப்பினர்-செயலாளராக இருந்து வருகிறார். அவரது கணவர் மல்லிகார்ஜூன பிரசன்னா ஐ.பி.எஸ். அதிகாரியாவார். மும்பையில் துணை கமிஷனராக இருக்கிறார்.
பிதாரியின் மகன் விஜயேந்திர பிதாரி. இவரும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த விஜயேந்திர பிதாரி, அங்குள்ள டோல்பூர் மாவட்ட எஸ்.பியாக இருக்கிறார்.
இவருக்கும், மதுரையில் உதவி கலெக்டராக இருக்கும் ரோகினி பாஜிபகாரே என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரோகினிக்கு சொந்த மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
ஆகஸ்டு 30-ந் தேதி பெங்களூர் அரண்மனையில், விஜயேந்திர பிதாரி-ரோகினி பாஜிபகாரே திருமணம் நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications