சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு திடீர் ஒத்திவைப்பு
கும்பகோணம்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நடப்பதாக இருந்த பொதுக்குழு கூட்டம் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை..
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் ஆகஸ்ட் 31 ம் தேதி நடப்பதாக இருந்தது .
ஆனால் கட்சியின் தலைவர் சரத்குமாருக்கு உடல் நிலை சரியில்லாததால் பொதுக் குழு கூட்டம் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், 26 மற்றும் 27 ம் தேதிகளில் ஈரோடு, சேலத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சிகளும், 31 ம் தேதி கும்பகோணத்தில் நடப்பதாக இருந்த பொதுக்குழு கூட்டமும் ஒத்திவைக்கப்படுகிறது.
விரைவில் வேறு தேதியில் பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்படும் என்று சரத்குமார் கூறியுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.