சென்னை-ஐஏஎஸ் அதிகாரி உட்பட குடும்பத்தில் 4 பேருக்கு ஸ்வைன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஐஏஎஸ் அதிகாரி, அவரது மனைவி, மகள் ஆகியோரும் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. ஆனாலும், இந்த நோய் தொற்றுவதை முழுமையாக தடுக்க முடியவில்லை.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த அதிகாரி, அவரது மகள், மனைவி ஆகியோரும் தற்போது காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தண்டையார்பேட்டையில் 6 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உட்பட 10 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது சென்னை மக்கள் மத்தியில் அதிக பயம் ஏற்பட்டுள்ளதால் தினமும் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் பெரும் கூ்டடம் அலைமோதுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+