'தம்' அடிப்பதில் இந்திய பெண்களுக்கு 3 வது இடம்

அமெரிக்க புற்றுநோய் அமைப்பு மற்றும் உலக நுரையீரல் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சேர்ந்து புகைபிடிக்கும் பெண்கள் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
உலகம் முழுவதும் சுமார் 25 கோடி பெண்கள் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்கள்.
இந்த பழக்கம் உள்ளவர்கள் வரிசையில் இந்தியப் பெண்கள் மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் அவர்கள் சுமார் 8 ஆண்டுகள் முன்னதாகவே இறந்துவிடுகின்றனர்.
முதலிரண்டு இடங்களை அமெரிக்காவும், சீனாவும் பிடித்துள்ளன. அமெரிக்காவில் 2.3 கோடி பெண்களும், சீனாவில் 1.3 கோடி பெண்களும் புகை பிடிக்கின்றனர்.
இந்தியாவில் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மொத்த பெண்கள் தொகையில் இது 20 சதவீதத்துக்கும் குறைவு.
பாகிஸ்தானில் 30 லட்சம்...
இந்தியாவை தவிர்த்து மற்ற தெற்காசிய நாடுகளில் இது மகிவும் குறைவு தான். பாகிஸ்தான் பெண்கள் இந்த பட்டியலில் 20வது இடத்தில் இருக்கின்றனர். சுமார் 30 லட்சம் பாகிஸ்தானிய பெண்கள் புகைபிடிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பழக்கத்துக்கு சுமார் 60 லட்சம் மக்கள் பலியாகி வருகின்றனர். அவர்களில் 20 லட்சம் பேர் புற்றுநோய்க்கு இறையாகி வருகின்றனர். இதனால் உலக பொருளாதாரம் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி டாலர் இழப்பை சந்திக்கிறது.
2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் 21 லட்சம் பேர் புகையிலை பாதிப்பினால் உண்டாக்கும் புற்றுநோயால் மரணமடைவார்கள் என்கிறது அந்த தகவல்.
குழந்தைகளுக்கு பாதிப்பு உண்டாகும்...
இது குறித்து ஹீலிஸ் சேக்ஷாரிய பொது சுகாதார நிறுவனத்தின் டாக்டர் பிசி குப்தா கூறுகையி்ல்,
இந்தியாவில் புகை பிடிக்கும் பெண்களின் சதவீதம் குறைவாக தான் இருக்கிறது. ஆனால், இந்தப் பழக்கத்தால் ஆண்களை விட பெண்களுக்கு தான் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. பெண்களுக்கு குறைபிரசவம், எடை குறைந்த குழந்தை, ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
புகையிலை நிறுவனங்கள் கட்டுடல் ரகசியம், வலிமை கூடும், இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும் என இந்த பெண்களை ஏமாற்றி விற்பனையை கூட்டி வருகின்றன. கல்லூரி மாணவிகள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றார்.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications