2 வாரத்திற்குள் 50,000 தமிழர்கள் மறு குடியமர்த்தப்படுவார்கள் - இலங்கை
கொழும்பு: இன்னும் 2 வாரத்திற்குள் 50 ஆயிரம் தமிழர்கள் மறு குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தரப்பில் கூறுகையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50 ஆயிரம் தமிழர்கள் இன்னும் 2 வாரத்தில் மறு குடியமர்த்தப்படுவார்கள்.
போர் நடந்த பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியைப் பொறுத்து, டிசம்பர் மாதத்திற்குள் அனைவரையும முகாம்களிலிருந்து சொந்த ஊர்களில் குடியமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது என்றனர்.
இதற்கிடையே, மறு குடியேற்றம் தொடர்பாக சொன்ன சொல்லை ராஜபக்சே அரசு காப்பாற்ற வேண்டும் என்று இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியின் வெளியுறவு விவகார செய்தித் தொடர்பாளர் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், டிசம்பர் மாதத்திற்குள் குடியமர்த்தி விடுவோம் என ஏற்கனவே இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. அதை அது நிறைவேற்ற வேண்டும்.
தொடர்ந்து அப்பாவி மக்களை முகாம்களிலேயே தங்க வைத்திருந்தால் அது வெறுப்பு விதையைத் தூவுவதற்குச் சமம். இதனால் வரும் ஆண்டுகளில் மீண்டும் போர் வெடிக்கும் அபாயத்தைத் தவிர்க்க முடியாது. கடும் போராட்டத்திற்குப் பின்னர் வெற்றி கிடைத்துள்ள நிலையில், மீண்டும் போருக்குப் போனால் நாடு மீளுவது கஷ்டம்.
போர் பாதித்த பகுதிகளிலிருந்த மீட்கப்பட்ட அப்பாவி மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களிடம் செல்ல ஐ.நா. பணியாளர்களுக்கும், தொண்டு நிறுவனக் குழுக்களுக்கும் தடையில்லாத அனுமதியை இலங்கை அரசு வழங்க வேண்டும்.
அகதிகளை பார்த்துப் பேசவும், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவும் தொண்டு நிறுவனக் குழுக்கள் அனுமதிக்கப்பட வேண்டும். பருவ மழைக் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் அதற்குள் முகாமில் தங்கியுள்ளவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டியது அவசியம், அவசரமாகும் என்றார்.
தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டும்-அமெரிக்கா:
அமெரிக்க இணை அமைச்சர் எரிக் ஸ்வார்ட்ஸ் கூறுகையில், முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சுதந்திரமான முறையில் நடமாடவும், முகாம்களை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.
இதற்கிடையே, கண்ணிவெடிகளை அகற்றும் பணியைப் பொறுத்தே அகதிகளை மீண்டும் சொந்த ஊர்களில் குடியமர்த்துவது அமையும் என்று ராஜபக்சேவின் தம்பியும், மூத்த ஆலோசகருமான பசில் ராஜபக்சே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் வசம் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளை மீண்டும் முதலிலிருந்து புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
மேலும், கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக கூடுதல் படையினரை அப்பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருவதாக ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வடக்கு யாழ்ப்பாணத்தில், 13000 ஹெக்டேர் நிலத்தில் அடுத்த ஆண்டு மீண்டும் விவசாயப் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த வயல்கள் கடந்த 10 ஆண்டுகளாக தரிசாக கிடப்பவை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications