நெல்லை கலெக்டர் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

மதுரை: சத்துணவு அமைப்பாளர் பதவியிடம் குறித்த சர்ச்சையில் திருநெல்வேலி கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே நைனாகரத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவர் அங்குள்ள இந்து ஆரம்பப்பள்ளியின் செயலாளாராக உள்ளார்.

இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ரிட் மனுவில் கூறியுள்ளதாவது..

நைனாகரம் இந்து ஆரம்பப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப பள்ளி நிர்வாகம் சார்பில் ஐந்து பேரை பரிந்துரை செய்து கலெக்டரிடம் பட்டியல் அனுப்பினோம்.

அதில் இரண்டு பேருக்கு மட்டும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள கலெக்டரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது.

பள்ளி சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட மீதமுள்ள மூன்று பேருக்கு நேர் முகத் தேர்வுக்கான கடிதம் அனுப்பப்படவில்லை. எனவே, மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+