போலி ஆவணம் மூலம் உரம், பூச்சி மருந்து விற்பனை - 2 வங்கி அதிகாரிகள் கைது

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: போலி ஆவணம் தயாரித்து உரம், பூச்சி மருந்து போன்றவற்றை விற்பனை செய்த கூட்டுறவுத்துறை வங்கி முன்னாள் செயலாளர், எழுத்தர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது எம். புதுக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி.

இந்த வங்கியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரம், பூச்சி மருந்துகளும், பொது மக்களுக்கு வழங்க வேண்டிய குடிமைப் பொருட்களும் போலி ஆவணம் மூலம் கள்ள சந்தையில் விற்கப்பட்டுவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.

இதனையடுத்து, இந்த வங்கியில் அதிகாரிகள் சோதனை செய்த போது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரம், பூச்சி மருந்துகளும், பொது மக்களுக்கு வழங்க வேண்டிய குடிமைப் பொருட்களும் போலி ஆவணம் மூலம் கள்ள சந்தையில் விற்கப்பட்டது தெரியவந்தது.

இதன் மூலம் கூட்டுறவு வங்கிக்கு 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, துணைப்பதிவாளர் ஞானசிவம் ராமநதாபுரம் வணிக குற்ற புலனாய்வு பிரிவினரிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், எஸ்.ஐகள் அமுதசெல்வி, வெங்கடேஸ்வரி, ஏட்டுகள் மீராமுகைதீன், மாசானம், முருகேசன் ஆகியோர் விசாரணை நடத்தி, வங்கியின் முன்னாள் செயலாளர் அழகுமலை, முன்னாள் எழுத்தர் தட்சிணாமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+