நடு ரோட்டில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த பெண்

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்தியாவின் புகழ் பெற்ற செல்போன் நிறுவனம் சார்பில் சாலைகளை தோண்டி கேபிள் வயர் பதிக்கும் பணியில் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் இப்பணி நடந்து வருகிறது. இப்பணியில் ஆந்திராவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாலர்கள் ஆங்காங்கே டெண்ட், கொட்டகை அமைத்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை அருகே வடமாநிலத்தை சேர்ந்த ராதா (33) என்ற பெண் போக்குவரத்து குறைந்த அந்த பகுதியில் திடீர் பிரவச வலி ஏற்பட்டு 2 குழந்தைகளை பெற்றுள்ளார்.
நடு ரோட்டிலேயே பிரசவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் சுகப் பிரவசத்தில் பிறந்த ஆண், பெண் குழந்தைகள் மற்றும் அப்பெண்ணை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.
இப்பெண் யார் என்று தெரியாததாலும் மொழி பிடிபடாமல் உள்ளதாலும் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் குறித்த விவரம் தெரியவில்லை. இருப்பினும் மனிதாபிமானத்தோடு தாய் மற்றும் சேய்களை அவர்கள் பராமரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications