கேல்ரத்னா விருது பெற்றார் மேரி கோம்- வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருதளித்தார் பிரதீபா பாட்டீல்
கேல்ரத்னா விருது பெற்றார் மேரி கோம்- வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருதளித்தார் பிரதீபா பாட்டீல்
டெல்லி: டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில், கேல்ரத்னா, அர்ஜூனா விருது உள்ளிட்டவற்றை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.
இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பெண் குத்துச் சண்டை வீராங்கனை மங்க்தே சுங்னிஜாங் மேரி கோம், ஒலிம்பிக் பகக்க வீரர்கள் சுஷில் குமார், விஜேந்தர் சிங் ஆகியோருக்கு உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது.
குத்தச்சண்டையில் நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் மேரி கோம். குத்துச் சண்டை வீரர்களுக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கேல் ரத்னா விருதை தனது இரு குழந்தைளுக்கும் சமர்ப்பிப்பதாக மேரி கோம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மற்ற இரு குத்துச் சண்டை வீரர்களான விஜேந்தர் சிங்கும், சுஷில்குமாரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் என்பது நினைவிருக்கலாம்.
இதுதவிர சாய்னா நெஹ்வால் உள்ளிட்ட 15 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
அர்ஜூனா விருது வாங்கியோரில் கெளம் கம்பீர் மட்டுமே கிரிக்கெட் வீரர் ஆவார்.
சாய்னாவின் பயிற்சியாரும், முன்னாள் பேட்மிண்டன் சாம்பியனுமான புல்லேல கோபிசந்த், இந்திய குத்துச் சண்டை அணியின் உதவிப் பயிற்சியாளர் ஜெயதேவ் பிஷ்த், சுஷில்குமாரின் பயிற்சியாளர் சத்பால் சிங் ஆகியோருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது.
இஷால் சிங் தியோல், சத்பீர் சிங் தாஹியா ஆகியோருக்கு தியான் சந்த் விருதும்,
ராஷ்டிரிய கேல் புரோத்சஹான் புரஸ்கார் விருது டாடா ஸ்டீல் நிறுவனம், ரயில்வே விளையாட்டு வாரியம் ஆகியவற்றுக்குக் கிடைத்தது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications