கேல்ரத்னா விருது பெற்றார் மேரி கோம்- வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருதளித்தார் பிரதீபா பாட்டீல்
கேல்ரத்னா விருது பெற்றார் மேரி கோம்- வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருதளித்தார் பிரதீபா பாட்டீல்
டெல்லி: டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில், கேல்ரத்னா, அர்ஜூனா விருது உள்ளிட்டவற்றை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.
இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பெண் குத்துச் சண்டை வீராங்கனை மங்க்தே சுங்னிஜாங் மேரி கோம், ஒலிம்பிக் பகக்க வீரர்கள் சுஷில் குமார், விஜேந்தர் சிங் ஆகியோருக்கு உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது.
குத்தச்சண்டையில் நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் மேரி கோம். குத்துச் சண்டை வீரர்களுக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கேல் ரத்னா விருதை தனது இரு குழந்தைளுக்கும் சமர்ப்பிப்பதாக மேரி கோம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மற்ற இரு குத்துச் சண்டை வீரர்களான விஜேந்தர் சிங்கும், சுஷில்குமாரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் என்பது நினைவிருக்கலாம்.
இதுதவிர சாய்னா நெஹ்வால் உள்ளிட்ட 15 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
அர்ஜூனா விருது வாங்கியோரில் கெளம் கம்பீர் மட்டுமே கிரிக்கெட் வீரர் ஆவார்.
சாய்னாவின் பயிற்சியாரும், முன்னாள் பேட்மிண்டன் சாம்பியனுமான புல்லேல கோபிசந்த், இந்திய குத்துச் சண்டை அணியின் உதவிப் பயிற்சியாளர் ஜெயதேவ் பிஷ்த், சுஷில்குமாரின் பயிற்சியாளர் சத்பால் சிங் ஆகியோருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது.
இஷால் சிங் தியோல், சத்பீர் சிங் தாஹியா ஆகியோருக்கு தியான் சந்த் விருதும்,
ராஷ்டிரிய கேல் புரோத்சஹான் புரஸ்கார் விருது டாடா ஸ்டீல் நிறுவனம், ரயில்வே விளையாட்டு வாரியம் ஆகியவற்றுக்குக் கிடைத்தது.