For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல் புகாரில் சிக்கிய கோவை அண்ணா பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஊழல் புகாரில் சிக்கிய கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ராதாகிருஷ்ணன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பர்னாலாவுக்குப் புகார்கள் பறந்தன.

இதையடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றம் அரசிடம் விளக்கம் கேட்டது

அதற்கு தமிழக அரசு அளித்துள்ள பதிலில், துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணனின் வீடு, அலுவலகங்களில் ஏற்கனவே சிபிசிஐடி போலீஸார் ரெய்டு நடத்தி பல்வேறு ஆவணங்களப் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X