தெலுங்கு தேசம் காலியாகி விட்டது, கூறுகிறார் ராஜசேகர ரெட்டி
தமிழகத்தில் திமுகவை நோக்கி அதிமுகவைச் சேர்ந்தவர்களும், பிற கட்சியினரும் அலை அலையாக போய்க் கொண்டிரு்பபதைப் போல ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை நோக்கி தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் கட்சியினர் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
தெலுங்கு தேச மகளிர் அணித் தலைவியான நடிகை ரோஜாவும் தெலுங்கு தேசத்தை விட்டு காங்கிரஸுக்குக் கிளம்பி விட்டார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த செயலுக்கு ஆந்திராவில் எதிர்க்கட்சியினரிடையே கடும் கோபத்தையும், கண்டனங்களையும் கிளப்பியுள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சி இதை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ராஜசேகர ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி காலியாகி விட்டது. இனியும் அக்கட்சியால் எழுந்திருக்க முடியாது.
நடிகை ரோஜா காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக சில நாட்களுக்கு முன்பு நான் சொன்னேன். ஆனால் உடனே அதை மறுத்துப் பேசினார் சந்திரபாபு நாயுடு. ஆனால் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் என்றார் ரெட்டி.
ரெட்டியின் இந்தப் பேச்சுக்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.