டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து, டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் உதவியாளர்கள் என 100 -க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கரூர் மாவட்டத்தில் 112 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 500 -க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

டாஸ்மாக் கடையில் பணியாற்றி , கையாடல் புகாரில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்ட இருவர் மற்றும் அவர்கள் சார்ந்த ஐந்து பேருக்கு மீண்டும் பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு பணி வழங்குவதற்காக ஏற்கனவே சில கடைகளில் பணியாற்றி வருபவர்களை காரணமின்றி, வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப்படுள்ளனர்.

கடந்த ஐந்தாண்டாகவே கரூர் டாஸ்மாக் நிர்வாகம் பணபலம், அதிகார பலத்தின் பின்னணியில் இயங்கி வருகின்றது. இதற்கு டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர், மாவட்ட மேலாளர் ஆகியோர் துணை போகின்றனர். இந்தப் போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+