ரஜினி ரசிகர்கள் அரசியல் அனாதைகள் - கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு!

Subscribe to Oneindia Tamil

Karthi Chidambaram
திருச்சி: ரஜினி ரசிகர்களுக்கு அரசியல் தளம் அமையவில்லை. ரஜினி ரசிகர்கள், அரசியல் அனாதைகளாக உள்ளனர். அவர்களைத் தேடிப் பிடித்து, இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களாகச் சேருங்கள் என்று கார்த்திக் சிதம்பரம் பேசினார்.

திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு பேசுகையில்,

தமிழகத்தில் உள்ள பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் தான், அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால், ராகுல் காந்தி அது போன்ற எந்த வித நிர்பந்தமும் இன்றி, அரசியலுக்கு வந்தவர்.

இன்றைக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள் கூட அரசியலில் குதித்து பதவிகளைப் பிடிக்க ஆசைப்படுகின்றனர். பல ஆண்டுக்கு முன்னரே ரஜினி ரசிகர் மன்றத்தினர், அரசியலில் இறங்க நினைத்தனர்.

ஆனால், அவர்களுக்கு அரசியல் தளம் அமையவில்லை. ரஜினி ரசிகர்கள், அரசியல் அனாதைகளாக உள்ளனர். அவர்களைத் தேடிப் பிடித்து, இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களாகச் சேருங்கள்.

அதே போன்று, பல நடிகர்களின் ரசிகர்களையும், இளைஞர் காங்கிரசில் சேர்க்க நாம் தீவிர முயற்சிக்கள் செய்ய வேண்டும். வரும் காலத்தில் இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்று பேர் வாங்க வேண்டும் என்றார்.

ரஜினி ரசிகர்களை அரசியல் அனாதைகள் என்று கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளின்போது அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தவர் கார்த்தி சிதம்பரம் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+