சென்னையில் இன்று முதல் ரேஷன் கார்டுகள் பரிசோதனை
சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ரேஷன் கார்டு பரிசோதனை இன்று தொடங்குகிறது. 3 முறை பரிசோதனை நடத்தப்படும். அதன் பிறகு போலி கார்டுகள் ரத்து செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டுகளில் உள்ள விவரங்களை சரிபார்ப்பதற்காக சென்னையில் ஆயிரம் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நேற்று நடந்த பயிற்சி முகாமின் நிறைவு நாளில் அமைச்சர் வேலு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது, 2009-ம் ஆண்டில் மக்கள் தொகை 6 கோடியே 65 லட்சத்து 66 ஆயிரமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அதையும் தாண்டி ரேஷன் கார்டுகளில் 8 கோடி பேர் இடம் பெற்றிருந்தனர். சுமார் 1.4 கோடி அளவுக்கு கூடுதலாக அட்டைகளில் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் அரசுக்கு அதிக அளவு நிதி செலவும், தானிய இழப்பும் ஏற்பட்டு வந்தது. இதை களைவதற்காக எந்த அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. நடவடிக்கை எடுத்தால் பிரச்சினையை சந்திக்க வேண்டியது வரும் என்று பயந்து வந்தனர். ஆனால், தமிழக முதல்-அமைச்சர் துணிச்சலாக இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன் பேரில் முதல் கட்டமாக கோவை, திருச்சி, சென்னை அண்ணாநகரில் ரேஷன் கார்டுகள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது, 2 லட்சத்து 46 ஆயிரம் பேர் கூடுதலாக இடம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2-ம் கட்டமாக நாகர்கோவில், தேனி, திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் 7 லட்சத்து 71 ஆயிரம் ரேஷன் கார்டுகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
3-வது கட்டமாக தஞ்சை, கன்னியாகுமரி, விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர் போன்ற 14 மாவட்டங்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. தற்போது, 65 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
4-வது கட்டமாக நீலகிரி, மதுரை, சிவகங்கை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னையில் வில்லிவாக்கம், ஆவடி, பெரம்பூர், திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, தியாகராய நகர், பரங்கிமலை ஆகிய மண்டலங்களில் செவ்வாய்க்கிழமை முதல் ரேஷன் கார்டு சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது என்றார்.
ரேஷன் கார்டு சரி பார்க்கும் பணிகள் ஒரு மாதத்திற்கு நடைபெறும். இதற்காக சென்னையில் ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி கடந்த ஒரு வாரமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications