சென்னையில் இன்று முதல் ரேஷன் கார்டுகள் பரிசோதனை
சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ரேஷன் கார்டு பரிசோதனை இன்று தொடங்குகிறது. 3 முறை பரிசோதனை நடத்தப்படும். அதன் பிறகு போலி கார்டுகள் ரத்து செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டுகளில் உள்ள விவரங்களை சரிபார்ப்பதற்காக சென்னையில் ஆயிரம் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நேற்று நடந்த பயிற்சி முகாமின் நிறைவு நாளில் அமைச்சர் வேலு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது, 2009-ம் ஆண்டில் மக்கள் தொகை 6 கோடியே 65 லட்சத்து 66 ஆயிரமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அதையும் தாண்டி ரேஷன் கார்டுகளில் 8 கோடி பேர் இடம் பெற்றிருந்தனர். சுமார் 1.4 கோடி அளவுக்கு கூடுதலாக அட்டைகளில் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் அரசுக்கு அதிக அளவு நிதி செலவும், தானிய இழப்பும் ஏற்பட்டு வந்தது. இதை களைவதற்காக எந்த அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. நடவடிக்கை எடுத்தால் பிரச்சினையை சந்திக்க வேண்டியது வரும் என்று பயந்து வந்தனர். ஆனால், தமிழக முதல்-அமைச்சர் துணிச்சலாக இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன் பேரில் முதல் கட்டமாக கோவை, திருச்சி, சென்னை அண்ணாநகரில் ரேஷன் கார்டுகள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது, 2 லட்சத்து 46 ஆயிரம் பேர் கூடுதலாக இடம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2-ம் கட்டமாக நாகர்கோவில், தேனி, திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் 7 லட்சத்து 71 ஆயிரம் ரேஷன் கார்டுகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
3-வது கட்டமாக தஞ்சை, கன்னியாகுமரி, விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர் போன்ற 14 மாவட்டங்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. தற்போது, 65 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
4-வது கட்டமாக நீலகிரி, மதுரை, சிவகங்கை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னையில் வில்லிவாக்கம், ஆவடி, பெரம்பூர், திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, தியாகராய நகர், பரங்கிமலை ஆகிய மண்டலங்களில் செவ்வாய்க்கிழமை முதல் ரேஷன் கார்டு சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது என்றார்.
ரேஷன் கார்டு சரி பார்க்கும் பணிகள் ஒரு மாதத்திற்கு நடைபெறும். இதற்காக சென்னையில் ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி கடந்த ஒரு வாரமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications