நெல்லை தபால் அலுவலகத்தில் ஒரே நாளில் ரூ.6 லட்சம் தங்க நாணயம் விற்பனை
நெல்லை: நெல்லை தபால் அலுவலகத்தில் நேற்று ஓரே நாளில் சுமார் 6 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நாணயங்கள் வி்ற்பனை செய்யப்பட்டன.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நெல்லை தலைமை தபால் அலுவலகத்தில் இயங்கி வரும் பைனான்ஸ் மார்ட் மூலம் தங்க நாணயங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரை கிராம், ஒரு கிராம், 5 கிராம் அளவிலான தங்க நாணயங்கள் தபால் அலுவலகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 25ம் தேதி முதல் தங்க நாணயங்களுக்கு ஆறு சதவீதம் தள்ளுபடியை தபால் துறை அறிவித்துள்ளது. தள்ளுபடி விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் நெல்லை தபால் அலுவலகத்தில் தங்க நாணயங்கள் அனைத்தும் விற்று தீர்த்து விட்டன. ஒரே நாளில் சுமார் 325 கிராம் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டன. விற்பனையான தங்க நாணயங்களின் மதிப்பு ரூ.6 லட்சத்து 33 ஆயிரம் ஆகும்.
ஓணம் தள்ளுபடி விற்பனை வரும் செப்டம்பர் 10ம் தேதி வரை நடக்கும் என நெல்லை கோட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் குமாரசாமி, தபால அலுவலக அதிகாரி மீனா ஆகியோர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications