ரெட்டி மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இதுவரை 142 பேர் மரணம்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ராஜசேகர ரெட்டியின் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இயற்கையாகவும், தற்கொலை மூலமும் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளதாக ஆந்திர மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரீம் நகர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தி்ல் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நல்கொண்டாவில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கரீம் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் அரசின் நலத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் வாங்கி வந்தார். ரெட்டி மறைவால் இந்தத் திட்டம் நின்று போய் விடுமோ, தனக்கு பணம் கிடைக்காதோ என்ற அதிர்ச்சியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளதாக மீடியாக்கள் கூறுகின்றன. இருப்பினும் அரசுத் தரப்பில் இது உறுதிப்படுத்தப்படவில்லை.












Click it and Unblock the Notifications