மத்திய சிறைகளில் மோப்ப நாய் பிரிவு-தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் உடனடியாக மோப்ப நாய் பிரிவு தொடங்க வேண்டும் என மத்திய சிறை கண்காணிப்பாளர்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மத்திய சிறை கண்காணிப்பாளர்களுக்கு உள்துறை செயலாளர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,
தமிழகத்தில் உள்ள புழல், வேலூர், கடலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய 9 மத்திய சிறைகளில் மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட இருக்கிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுங்கள்.
நாய் வாங்க ரூ. 2.06 லட்சம்
இதற்காக தனி கட்டிட வசதி ஏற்படுத்தி கொள்ள ரூ. 3 லட்சம், மோப்ப நாய்கள் வாங்க ரூ. 2.06 லட்சம் நிதியாக வழங்கப்படும்.
இந்த உத்தரவு தொடர்பான மேல் நடவடிக்கை குறித்து குறித்து ஒருவார காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போதோ அல்லது இயற்கை இடர்பாடுகளின் போது இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளும் நபர்களை கண்டுபிடிக்க வசதியாக தீயணைப்புத்துறையில் மோப்ப நாய் பிரிவை ஏற்படுத்தி பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தற்போது மத்திய சிறைகளில் மோப்பநாய் பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications